Published : 07 Oct 2022 06:42 AM
Last Updated : 07 Oct 2022 06:42 AM
மகிழ்ச்சியூட்டுவதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், தன்னம்பிக்கை, அறம் ஆகியவற்றை மறைமுகமாக ரசிக மனங்களுக்குள் கடத்தும் திரைப்படங்கள் எல்லாக் காலத்திலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் அதிகமும் பங்கேற்க விரும்பும் சூர்யாவுக்கு, ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தில் சூர்யா நடிப்பில் தொட்ட உச்சத்தை முந்திச் செல்லும் பல படங்களை காலம் அவருக்கு வழங்கலாம். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க உந்துசக்தியாக இருந்த ‘ஜெய் பீம்’ போன்ற படங் களையும் அவர் தயாரித்து, நடிக்கலாம். ஏனென்றால், ஒரு வெற்றிகரமான நடிகராக, பணம், புகழ் ஆகியவற்றை ஈட்டியபின் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே தேங்கிப் போய்விடுபவர்களுக்கு மத்தியில், சூர்யா சமூகத்தின் கலைஞனாக தன்னை உணர்ந்தவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT