Published : 21 Aug 2022 01:22 PM
Last Updated : 21 Aug 2022 01:22 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 8 | என்.எஸ்.கிருஷ்ணனை மயக்கிய பாடல்!

எண்ணங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று நேர்மறை எண்ணங்கள் (POSITIVE THOUGHTS) மற்றது எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS).நேர்மறை எண்ணங்கள் என்றால் நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.எங்கும் எதிலும் நல்லதையே பார்ப்பது,நினைப்பது.

இவை நிறைந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தாலும் அவர்களைப் பொறுத்த அளவில் இன்பமாகவே வாழ்வார்கள்.தோல்விகளைக்கூட வெற்றிக்கான படிக்கட்டுக்களாகக் கருதி எளிதில் கடந்து செல்வார்கள்.

மற்றவர்கள் பார்வைக்குக் குறையாகத் தென்படுவதெல்லாம் அவர்களுக்கு நிறைவாகவே தெரியும். வாழ்வில் எல்லாமே இன்ப மயமாகவே இருக்கும். அப்படிப்பட்ட இன்பமயமான ஒரு பாடல் தான் இன்று நாம் திரை இசைக்கடலில் கண்டெடுத்திருக்கும் பாடல். இந்தப்பாடலை இயற்றியவர் உடுமலை நாராயண கவி.

1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்த ‘மணமகள்’ திரைப்படத்தில் பிறவி இசை மேதை சி.ஆர்.சுப்பராமன் இசையில் விளைந்த அற்புதமான பாடல் முத்து இது. இந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் மணமகள் படத்தைப் பற்றி இரண்டொரு விஷயங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது ‘சுப்ரபா’ என்கிற மலையாள நாடகத்தை மையமாகக் கொண்டு கலைவாணர் தயாரித்த படம்.அதுவரை ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடிக்கொண்டிருந்த ‘நாட்டியப்பேரொளி’ பத்மினி முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமான படம். கலைவாணர் அவர்களே படத்தை இயக்கவும் செய்தார். அவரது இந்தப் படத்தால், காலத்தால் அழிக்கவே முடியாத இரண்டு காவியப் பாடல்கள் நமக்குக் கிடைத்து விட்டன.

ஒன்று..இன்றுவரை கர்நாடக இசைக்கச்சேரி மேடைகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x