Published : 25 Jul 2022 06:09 PM
Last Updated : 25 Jul 2022 06:09 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 4 | காதலர்கள் சந்தித்தால் பிறக்கும் வார்த்தைகள்!

'வீரபாண்டிய கட்டபொம்மன்' - நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஆசியா கண்டத்திலேயே தலை சிறந்த நடிகர் என்ற பெருமையை கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய - ஆப்பிரிக்க திரைப்படவிழாவில் பெற்றுத் தந்த படம். அது மட்டுமல்ல; அந்தப் படத்துக்கு இசையமைத்த இசை அமைப்பாளருக்கு ‘ஆசியா கண்டத்திலேயே சிறந்த இசை அமைப்பாளர்’ என்கிற பெருமையைப் பெற்றுத்தந்த படமும் கூட!

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இசை மேதை ‘இசைச் சக்கரவர்த்தி’ஜி. ராமநாதன் தான் அந்த ஒப்பற்ற பெருமையைப் பெற்ற கலைஞர். படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பி.ஆர். பந்துலுவின் ஆஸ்தானப் பாடலாசிரியராக இருந்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம். அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் இந்தப் படத்தில் ஜி. ராமநாதனின் இசையின் திறத்தை எப்படி அளவிடுவது? நினைத்துப் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது. அதிலும் இன்றளவும் கேட்பவர் மனதில் இனிமையையும் உற்சாகத்தையும் பரவ விடும் காதல் பாடல் - கவிஞர் கு.மா. பாவின் பெயர் சொல்லும் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’பாடல் தான். இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x