

பேசும்படக் காலத்தின் தொடக்கத்திலிருந்து பல ஆண்டுகள் வரை புராணக் கதைகளே அதிகமும் படமாகின. பிறகு, புதுமைக் கருத்துகளுடன் சமூகக் கதைகள் எடுத்தாளப்பட்ட படங்கள் செல்வாக்குப் பெற்றன. அதனால், பக்திப் படங்களை மக்கள் ஏறக்குறைய மறந்துவிட்டிருந்தனர்.
அப்போது துணிச்சலுடன் பக்திப் படத்தை இயக்கி வெளியிட்டார் ஏ.பி. நாகராஜன். அதன் வெற்றியால் தொடர்ந்து பல பக்திப் படங்கள் வரிசையாக வெளியாகித் தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட்டது. அது பக்தி சுனாமியாக ஆர்ப்பரித்த ‘திருவிளையாடல்’.