

இன்றைக்கு, பூங்காக்கள், மால்கள் போன்ற பொது இடங்களில், மக்கள் மிகநெருக்கமாகப் பயணிக்கும் பேருந்துகள், மெட்ரோ தொடர் வண்டிகளில் இன்றைய கணினி யுகக் காதலர்கள் மிக நெருக்கமாக, நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
பாலியல் ஈர்ப்பால் மனதில் கருக்கொள்வது உறுதியாகக் காதல் அல்ல. அது தன் தேவையை அடைந்தபிறகு, சம்பந்தப்பட்ட இருவரிடமிருந் தும் நிழல்போல் கடந்து போய்விடும். ஆனால், ஒரு தூய காதல் என்பது, பாதுகாப்பு உணர்வைத் தருவது. நேர்மையிலிருந்து துளிர்ப்பது. இருவரது மனதிலும் பரஸ்பரக் காதல் ஏற்பு உறுதியான பிறகு கைகோத்து நடப்பது, ஒரே பைக்கில் பயணிப்பது இவையெல்லாம் தவறில்லைதான். ஆனால், அதற்கும் நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தூய காதலில் காண முடியும்.