‘ஆடு’ம் மனிதர்கள்! | மாற்றுக் களம்

‘ஆடு’ம் மனிதர்கள்! | மாற்றுக் களம்
Updated on
1 min read

இனம், மொழி, மதம் ஆகிய கலாச்சாரத் தளங்கள், காலந்தோறும் பல மாறுதல்களுக்கு உள்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், சாதி எனும் கட்டுமானம் மட்டும், குணம் மாறாத ஒரு கொடிய வேட்டை விலங்கைப் போல் மனித மனங்களில் மறைந்து வாழ்ந்தபடி இருக்கிறது.

அதற்கு நிகழ்காலத்தின் ரத்த சாட்சியமாக சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றன. சக மனிதனை இவ்வாறு படுகொலை செய்யும் சாதி எனும் நஞ்சு, நம்மை அண்டிப் பிழைக்கும் விலங்குகளைக்கூட ஊடுருவிக் கொல்லும் என்பதைப் பொட்டில் அறைந்து சொல்கிறது 22 நிமிடங்கள் ஓடும் ‘பாஞ்சாலி’ என்கிற குறும்படம். சர்வ நிச்சயமாக உண்மைச் சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது என்பதை உணர வைக்கின்றன கதையும் களமும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in