விஜயகாந்துக்குத் தம்பி ஆன கதை! | ப்ரியமுடன் விஜய் - 17

விஜயகாந்துக்குத் தம்பி ஆன கதை! | ப்ரியமுடன் விஜய் - 17
Updated on
3 min read

அரசியல், சமூக விமர்சனத்துடன் இன்று வரை படங்களை இயக்கி வருவதால் ‘புரட்சி இயக்குநர்’ என்று அழைக்கப்படுகிறார் எஸ்.ஏ.சந்திர சேகரன். அவருடைய படங்களில் தொடர்ந்து நடித்த காரணத்தாலேயே ‘புரட்சிக்கலைஞர்’ எனக் கொண்டாடப்பட்டார் விஜயகாந்த். தெரிந்த வர்கள், தெரியாதவர்கள் என்கிற பாரபட்சம் இல்லா மல் உதவி எனக் கேட்டு வருகிற எவருக்கும் உதவக் கூடியவராக விஜயகாந்த் விளங்கினார். அவருடைய தம்பியாக விஜயை நடிக்க வைத்தால், விஜய் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துவிடுவார்; படமும் உறுதியாக வெற்றிபெறும் என்று ‘செந்தூரப் பாண்டி’ திரைக்கதையை எழுதி முடித்தார் எஸ்.ஏ.சி. அதன்பின் தனது கோரிக்கையை அவர் விஜயகாந்திடம் வைத்தபோது நடந்த நிகழ்வு களை இந்த வாரம் இங்கே பகிர்ந்திருக்கிறார்:

“தாராளமாகச் செலவழித்து 1992இல் ஒரு படம் பண்ண வேண்டும் என்றால் குறைந்தது 1 கோடி ரூபாய் வேண்டும். மகனை நல்லபடியாக அறிமுகப்படுத்த வேண்டுமே என்று 70 லட்சம் ரூபாய் செலவு செய்து ‘நாளைய தீர்ப்பு’ படத்தை எடுத்தேன். மொத்தப் பணமும் நஷ்டம். ஆடிப்போய்விட்டேன். அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. விஜயகாந்தை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து, விஜயை அதில் ஹீரோவாக்கினால், அவனுக்கு ரீச் கிடைக்கும் என்று நினைத்தேன். அப்போது நடந்த நிகழ்வு பற்றிக் கூறுவதற்கு முன்பு, நானறிந்த விஜயகாந்த் குறித்து ஒன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் எப்படிப்பட்ட பரந்த மனதுடைய மனிதர் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே போதுமானது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in