

அமெரிக்காவின் மிக்ஷிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகத் திரைப்படக் கல்வியைப் பயிற்றுவித்து வருபவர் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன். தமிழ், இந்திய சினிமா வரலாற்றுக்குத் தன்னுடைய ஆய்வெழுத்துகளின் வழியாகத் தொடர்ந்து செழுமை சேர்த்து வரும் இவரின் புதிய நூல் ‘ஆளுமைகள் எனும் ஆடி’. தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநராகவும் இயங்கிவரும் இவர், கடந்த 2019இல் வெளியான ‘கட்டுமரம்’ என்கிற சுயாதீனத் திரைப்படத்தின் மூலம், ஓர் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது தன்னுடைய சொந்தக் கிராமத்தைக் கதைக் களமாகக் கொண்டு ‘தங்கம்’ என்கிற தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல்: