

உலகில் தோன்றிய உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிக்கத் தெரிந்தது என்பார்கள். அதற்கு இணையாக மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அது மனித குலத்துக்கு இயற்கை அருட்கொடையாக அளித்த காதலுணர்வு. இது, ஆணும் பெண்ணும் ஒருவரை இன்னொருவர் மனதின் ஆழத்திலிருந்து நேசிப்பதிலும் மதிப்பதிலும் வெளிப்படுவது.
அத்தகைய சிறப்பைப் பெற்ற காதலுணர்வின் புனிதத்தை மிக நேர்த்தியாகப் பேசியிருக்கிறது சென்ற நூற்றாண்டின் இறுதி வரையிலான இந்திய, தமிழ் சினிமா. அழியாப் புகழ்பெற்ற திரைப்படமான ‘தேவதாஸ்’ தொடங்கி தமிழில் ‘சலங்கை ஒலி’ வரை, காதலின் உள்ளார்ந்த மேன்மையை விளம்பிய படங்கள் ஏராளம்.