

தமிழ் சினிமாவில் 25 ஆண்டு களை நிறைவு செய்துள்ள பாலா இயக்கத்தில், 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருண் விஜய் நடிப்பில் பொங்கல் திருநாள் ரிலீஸ் ஆக வெளியாகிறது ‘வணங்கான்’ திரைப்படம். அந்த மகிழ்ச்சியில் இருந்த அருண் விஜய், இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
சூர்யாவை மனதில் வைத்து பாலா எழுதிய கதையில் நீங்கள் பொருந்திய பின்னணி பற்றிக் கூறுங்கள்.. கடந்த பொங்கலுக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நான் நடித்த ‘மிஷன்: சேப்டர் 1’ படம் வெளியானது. இந்தப் பொங்கலுக்கு ‘வணங்கான்’. ‘மிஷன்: சேப்டர் 1’ இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தபோதுதான், ‘வணங்கான்’ படத்தில் பாலா சாரும் சகோதரர் சூர்யாவும் அந்தப் படத்தில் இணைந்து பணி செய்வதில்லை என்று சுமுகமாக, ஒருமனதாக விலகிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.