Published : 26 Apr 2024 08:39 AM
Last Updated : 26 Apr 2024 08:39 AM

ப்ரீமியம்
திரைசொல்லி 02 - ஆடுஜீவிதம்: தோற்றது நீங்களா, படமா?

கலை சினிமா என்பது வாழ்வின் துயரப்பாடுகளை மட்டுமே பேசுகிறது என எண்ணிய காலம் ஒன்று நிலவியது. நாடக வயப்பட்ட புராணப் படங்களையும் சமூகப் படங்களையும் பார்த்துக்கொண்டி ருந்தவர்களுக்கு, தம்மைச் சுற்றி நிகழும் வாழ்வை அச்சுப் பிசகாமல் திரையில் பிரதிபலிக்கும் ‘அதி யதார்த்த சினிமா’ (Neo Realism) சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்வலையை உருவாக்கியதால் உதித்த எண்ணம் அது.

ஏனெனில், உண்மையான வாழ் வென்பது யாரோ தன் விருப்பத்துக்கு எழுதிய புனைவுக் கதையல்ல. தவிர்க்க வியலாத துயரங்கள் கலந்த ஒரு சுடும் யதார்த்தம். அதை சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ (Song of the Road) கலாபூர்வ அணுகலோடு திரையில் கொணர்ந்தது. அப்படத்தின் யதார்த்தச் சித்தரிப்பு எவ்வளவு நெருக்கமாகப் பார்வையாளரது வாழ்வைத் தொட்டு நிற்கிறது என்கிற வியப்பைப் புறந்தள்ளி, ‘சத்யஜித் ராய் இந்தியாவின் வறுமையை மேலைநாடுகளுக்கு விற்கிறார்’ என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள் சில விமர்சகர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x