Published : 02 Jun 2023 06:13 AM
Last Updated : 02 Jun 2023 06:13 AM

ப்ரீமியம்
மு.கருணாநிதி நூற்றாண்டு | கடவுளுக்குக் கலைஞரைப் பிடிக்கும்!

இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, அடித்தட்டு மக்களை அணிதிரட்டி வெற்றிகண்டது, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சமூக, அரசியல் எழுச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கம். அந்த இயக்கத்தைப் பெரும் சமூக அசைவியக்கமாக மாற்றிய தளகர்த்தர்களில் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகிய மூவரது எழுத்தாளுமைக்கு பெரிய பங்கு இருப்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

திராவிட இயக்கம் வேர்பிடித்து, ஆலமரமாகத் தழைத்து, தேர்தல் அரசியலில் வெற்றிகண்டு பலன் கொடுக்கத் தொடங்கியதன் பின்னணியில் திரைப்படத்தை ஒரு கலைஆயுதமாகப் பயன்படுத்திய அண்ணா, கருணாநிதி இருவருக்கும் பெரிய பங்கிருக்கிறது.

கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால்: “கருத்துகளை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல, அன்றைக்கு மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டும் இருந்தன. ஒன்று, மேடை; இன்னொன்று, பத்திரிகை; மூன்றாவது, திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றிகொண்டார். சினிமா என்கிற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x