

ஒரு நபர் இயற்கை மரணம் அடையும்போது அவர் விட்டுச் சென்ற வங்கிச் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது.
குறிப்பாக, வங்கிக் கணக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட ‘நாமினி’ எனப்படும் நியமனதாரரே அந்தப் பணத்துக்கு முழு உரிமையாளர் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், இந்தியச் சட்ட நடைமுறைகளின்படி நியமனதாரர் மற்றும் வாரிசுதாரர் ஆகிய இருவருக்கும் இடையிலான அதிகார வரம்புகள் முற்றிலும் வெவ்வேறானவை.
தற்காலிகப் பாதுகாவலர்
வங்கிக் கணக்கு அல்லது காப்பீட்டுத் திட்டங்களில் நாம் குறிப்பிடும் நியமனதாரர் என்பவர் அந்தச் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் அல்ல. நிதி நிறுவனங்கள் தங்களின் பொறுப்பில் உள்ள பணத்தை ஒரு நபரின் இறப்பிற்குப் பிறகு யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான ஒரு முகவரியாகவே நியமனதாரரைக் கருதுகின்றன.