குடும்பம் குழந்தைகளின் நந்தவனமா அல்லது நச்சுக்களமா?

குடும்பம் குழந்தைகளின் நந்தவனமா அல்லது நச்சுக்களமா?
Updated on
2 min read

குழந்தைகள் பெற்றோரின் சொத்தல்ல; அவர்கள் நாம் நடுகின்ற 'தலைமுறை விதைகள்'. அவர்களின் எதிர்காலம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு புனிதமான பொறுப்பு. ஒரு தாயின் மடி, குழந்தையின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இயற்கையான தொட்டில்; தந்தையின் தோள்கள், குழந்தைக்கு இரண்டாம் கர்ப்பப்பை. தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான உறவு இனிமையாக இருக்கும் வரை குழந்தைக்கு வீடு ஒரு சொர்க்கம். ஆனால், அந்த உறவு வன்முறையாக மாறும்போது, அந்தச் சொர்க்கம் நரகமாக மாறுகிறது. அப்போது குழந்தையின் நிலை என்னாகும்?

குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதை விட, நாம் செய்வதையே அப்படியே தங்களின் செயல்களில் பிரதிபலிக்கிறார்கள். எனவே, குடும்பம் என்பது வெறும் உணவும், உடையும், இருப்பிடமும் அளிக்கும் சாதாரண இடமல்ல; அது ஒரு மனிதனின் உள்ளத்தை மிகச்சரியாக வடிவமைக்கும் முதல் கல்விக்கூடம்.

அங்கு பெற்றோர்கள் காட்டும் நிதானமும் அன்பும்தான் அந்தக் குழந்தையின் எதிர்கால ஆளுமையை முழுமையாக வடிவமைக்கின்றன. பொதுவாக, குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நான்கு முக்கிய வழிகளில் புரிந்து கொள்கிறார்கள்.

பெற்றோரின் செயல்களை அப்படியே தங்களின் நடையாகப் பின்பற்றிப் பார்த்துக் கற்கும் பாங்கு, பெற்றோரின் சொற்களைத் தன் மனதில் செல்வமாகப் பதிய வைத்துக் கேட்டுக் கற்கும் குணம், தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து உண்மையை உணர்ந்து கொள்ளும் அனுபவம் தரும் அறிவு மற்றும் பெற்றோரின் அரவணைப்பால் செதுக்கப்படும் அன்பில் வளரும் ஆளுமை ஆகிய வழிகளில் அவர்கள் உலகை எதிர்கொள்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால், குழந்தைகள் நாம் உச்சரிக்கும் வெற்றுச் சொற்களை விட, நாம் வாழும் உன்னதமான வாழ்க்கை முறையையே தங்களின் ஆழமான பாடமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in