Last Updated : 30 Apr, 2023 08:15 AM

 

Published : 30 Apr 2023 08:15 AM
Last Updated : 30 Apr 2023 08:15 AM

ப்ரீமியம்
முதல் பொது வேலை நிறுத்தப் போராட்டம்

விடுதலை இயக்க வீரரும் சிறந்த சொற்பொழிவாளருமான சுப்பிரமணிய சிவா, 1908 பிப்ரவரி முதல் வாரம் தூத்துக்குடி வந்துசேர்ந்தார். வ.உ.சி.யின் இல்லத்திலேயே தங்கியிருந்து தூத்துக்குடியின் பல பகுதிகளிலும் கனல்தெறிக்கும் சொற்பொழிவுகளை ஆற்றினார்.

பாபநாச மலையின் அடிவாரத்தில் 1885இல் நெசவு ஆலையைத் தொடங்கிய ஹார்வி நிறுவனம், தூத்துக்குடி நகரிலும் ‘கோரல் மில்’ என்கிற ஆலை ஒன்றை நிறுவியது. குறைந்த ஊதியம் அளித்து கடுமையான வேலை வாங்குவதில் நிர்வாகம் கைதேர்ந்திருந்தது. இதன் பங்குதாரர்களுக்கு 60% லாபப் பங்கு கிடைத்தது. ஆனால், தொழிலாளர் நிலையோ வருந்தத்தக்கதாக இருந்தது. பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர்களும் ஆலையில் பணிபுரிந்தனர். உணவு உண்ணப் போதிய இடைவேளை கொடுக்கப்படவில்லை. ஊதியம் மிகக்குறைவு. விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும். தொழிலாளர் செய்யும் சிறு தவறுக்கும் பிரம்படி உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x