Last Updated : 30 Apr, 2023 07:40 AM

 

Published : 30 Apr 2023 07:40 AM
Last Updated : 30 Apr 2023 07:40 AM

ப்ரீமியம்
மே நாள் பிறந்தது

உலக நாடுகள் பலவற்றில் 19ஆம் நூற்றாண்டில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்வரை வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரு நாளுக்கான வேலை நேரத்தின் அளவு சட்டபூர்வமாக வரையறுக்கப்படாவிட்டால், தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே எட்டு மணி நேர வேலை நாள் என்னும் கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டன.

அமெரிக்காவில் இயங்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, 1886 மே 1 அன்று ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்தும் நாள் என்று அறிவித்து, நாடு முழுவதும் அன்றைய நாளில் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அமெரிக்காவின் பல தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பேரணிகளை நடத்தினார்கள். பலர் கைதுசெய்யப்பட்டனர். மே 3 அன்று ஒரு தொழிற்சாலையின் வாயிலில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதை எதிர்த்து மே 4 அன்று சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது வன்முறை வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர். இதற்காகத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x