Last Updated : 05 Mar, 2023 07:01 AM

1  

Published : 05 Mar 2023 07:01 AM
Last Updated : 05 Mar 2023 07:01 AM

ப்ரீமியம்
சங்க இலக்கியத்தில் உழைக்கும் பெண்கள்

பொருளாதாரத்தில் பெண் களின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச் சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருளாதாரம்தான் விரைவாக வளரும். சமூகநீதியின் முதல் விதை அப்போதுதான் முளைவிடும். பாலினம் சார்ந்த பிற்போக்கு மதிப்பீடுகள் மட்டுப்படும். ‘வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்பதெல்லாம் மாடமாளிகைகளின் வெட்டிப் பெருமிதம்.‌ பெரும்பான்மை மக்களின் யதார்த்தமான நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.

இந்தியத் துணைக்கண்டத்தில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களில் சங்க இலக்கியம் தனித்துவமானது. இவ்விலக்கியங்களில் வீரயுகக் காலத்தின் போர்கள், வீரம், கொடைப்பண்புகள் போன்ற விழுமியங்கள் முன் னிறுத்தப்பட்டாலும் தொல்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியல், கருத்தியல் சார்ந்த முன்னுரிமைகளையும் அன்றாட வாழ்க்கையின் நடைமுறைத் தன்மைகளையும் புரிந்துகொள்ள சங்க இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x