Last Updated : 06 Aug, 2023 09:14 AM

 

Published : 06 Aug 2023 09:14 AM
Last Updated : 06 Aug 2023 09:14 AM

ப்ரீமியம்
இலக்கிய நண்பர்கள்

தமிழ்ச் சங்க இலக்கியம் நட்பைப் பாடியுள்ளது. கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உள்ள நட்பு அதற்கோர் உதாரணம். பாகவத புராணத்தில் கண்ணனுக்கும் சுதாமாவுக்குமான நட்பும் பிரசித்திபெற்றது. பிற்கால இலக்கியத்தில் இம்மாதிரியான காவியத் தன்மையுடைய நட்புக் கதைகள் உருவாகவில்லை. உணர்ச்சிமயத்திலிருந்து கதைகள் விடுபட்டுவிட்டது, அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எழுத்தாளர்கள் இணை, இலக்கியத் துறையில் நண்பர்களாக இயங்குவது என்கிற போக்கு பின்னால் உருவானது.

தமிழ் எழுத்தாளர்களில் புகழ்பெற்ற இணை, சுபா. சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய கல்லூரிக்கால நண்பர்கள் இருவர் இணைந்து ‘சுபா’ என்கிற பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினர். துப்பறியும் கதை உலகில் இவர்கள் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தனர். 1979இல் எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளைக் கடந்து அதே நட்புடன் இன்றும் இருவரும் எழுதி வருகிறார்கள். ‘அயன்’, ‘கோ’ போன்ற வெற்றிப் படங்களின் கதை கள், இந்த இணை எழுத்தாளர்களின் பங்களிப்பே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x