

பகவான் கிருஷ்ணர் கீதையில் (9-26) ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது பக்தியுடன் தரப்படும் இலை, பூ, பழம், தண்ணீர் போன்றவற்றை நான் ஏற்கிறேன் எனக் கூறுகிறார்.
பத்ரமாக (இலை) அருகம்புல், புஷ்பமாக (பூ) எருக்கம்பூ ஆகியவற்றைக் கொண்டு விநாயகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. அது போன்று வன்னி இலை கொண்டு வழிபடுவதும் மிகச் சிறந்தது. இதன் சிறப்பை விநாயகர் புராணத்தின் வாமன சரித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
முற்காலத்தில் காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணுவின் அம்சமாக ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் வாமனர்.