

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் திருத்தலம் ஆகும். 2,000 ஆண்டு கால பழமை வாய்ந்த திருத்தலத்தில் நரசிம்ம பெருமாள் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சமண மதம் தழைத்தோங்கிய சமயம், பல்லவ மன்னன் ஒருவன் சைவம், வைணவம் சார்ந்த கோயில்களை இடித்தான். மன்னனை எதிர்த்து நரஹரி என்ற வைணவ முனிவர் குரல் கொடுத்தார். அவரை கொல்ல மன்னன் ஆணையிட்டபோது, அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க வேண்டும் என்று முனிவர் சாபமிட்டார்.