

இராமாயணம் படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. விதவிதமான இராமாயணங்கள் நம்மை மற்றொரு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவற்றுக்கு உண்டான குணாதியங்களுடன் படைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நெடுங்காலமாக இராமனுடைய வரலாறு மக்கள் புழக்கத்தில் இருந்தது என்றாலும், குழந்தை (இ)ராமன் ஓடியும் பாடியும் கெஞ்சியும் கொஞ்சியும் விளையாடிய காட்சியைக் கவிஞர்கள் யாரும் அதிகமாகப் பாடவில்லை.
குழந்தையை விஷமக்காரனாகக் காணமுடிந்த அளவுக்கு, பித்ரு வாக்கிய பரிபாலனமும் மாத்ரு வாக்கிய பரிபாலனமும் செய்த (இ)ராமக் குழந்தையை விஷமக்காரனாகக் காண்பதற்கு அவ்வளவாக யாருக்கும் மனம் வரவில்லை.
ஆனாலும் அத்யாத்ம இராமாயணம் அழகுக் குழந்தையின் ஆனந்த விளையாட்டை பெருமையாகப் படம் பிடிக்க முற்படுகிறது.
கர்ணயோ: ஸ்வர்ண ஸம்பன்ன ரத்னார்ஜுன ஸடாலுகம்
சிக்ஞான மணி மஞ்சீர கடீஸூத்ராங்கதை வ்ருதம்
ஸ்மித வக்த்ராலபத சனம் இந்த்ரநீல மணி ப்ரபம்
அங்கணே ரிங்கமாணம் தம் தர்ணகானனு ஸர்வத:
த்ருஷ்ட்வா தசரதோ ராஜா கௌஸல்யா முமுதே ததா