

தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார். எப்போதும் கோபத்துடன் இருக்கும் முனிவர், அன்று தேவேந்திரனை அன்பாகப் பார்த்து, ஒரு மாலையைக் கொடுத்தார்.
தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். ஆனால் யானை மாலையை காலில் போட்டு மிதித்தது. அதை கண்ட துர்வாசர் கோபமுற்று, தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழக்கும்படி சபித்தார்.