

மயிலாடுதுறையில் இருந்து 13 கிமீ தூரத் தில் உள்ள கீழையூர் கடைமுடிநாதர் கோயில், மன அமைதி அருளும் தலமாக போற்றப்படுகிறது. மேற்கு பார்த்து அமைந்த தலத்தில் ஈசன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ஆணவம் கொண்டதால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். கீழையூர் தலத்தில், சிவபெருமான் பிரம்மதேவருக்கு ஒரு கிளுவை மரத்தடியில் காட்சி அருளினார்.