

ஒருசமயம் பகவான் சற்று ஓய்வு எடுக்க விரும்பினார். தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மீது வைத்துவிட்டு, பாதுகைகளை தரையில் கழற்றி வைத்தார்.
சிறிது தூரம் நடந்து சென்றார். இந்த நேரத்தில் கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியன பாதுகைகளைக் கண்டு நகைத்தபடி, “பார்த்தீர்களா. மேன்மக்கள் மேன்மக்களே. எங்களை அனந்தன் மீது வைத்த பகவான், உங்களை தரையில் விட்டுச் சென்றுள்ளார்” என்று ஏசினர்.
மிகவும் வருத்தம் அடைந்த பாதுகைகள், பகவான் வந்ததும் அவரிடம் இதுகுறித்து முறையிட்டன. அவர்களுக்கு ஆறுதல் கூறிய பகவான், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் நான் ஸ்ரீராமனாக அவதாரம் எடுக்கும்போது, உங்கள் துயர் தீர்க்கப்படும்” என்றார்.
சொன்னதுபோல் பகவான் ஸ்ரீராமனாக அவதாரம் எடுத்தார். பரதன் முடிசூட வேண்டும் என்று கைகேயி கூற, வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். விஷயம் அறிந்த பரதன், ஸ்ரீராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடினான்.