

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்கு அருகில் நகரி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள அருங்குளம் அகத்தீஸ்வரர் கோயில் மனநிம்மதி அருளும் தலமாகப் போற்றப்படுகிறது.
ஹரிஹர குளம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் அருங்குளம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ‘ஜெயங்கொண்ட சோழமண்டலத்து இல்லத்தூர் நாட்டு அருங்குளம்’ என்று திருநீற்றுச் சோழன் - முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு அருங்குளத்தை குறிப்பிடுகிறது.