Published : 09 Feb 2023 06:10 AM
Last Updated : 09 Feb 2023 06:10 AM

ப்ரீமியம்
தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 01: அருணகிரிக்கு அடியெடுத்துக்கொடுத்த முருகன்

ஜி.ஏ. பிரபா

‘முருகா' - மூவினைகளையும் தீர்க்கும் முத்தமிழ் நாமம். உடலாக, உயிராக, அதை இயக்கும் சக்தியாகத் திகழ்பவன் முருகன். வாடிய பயிருக்கு வற்றாது நீர் ஊற்று பவன். அமிர்தமாய் உயிர்மூச்சு அருளும் மும்மூர்த்திகளின் வடிவமானவன். உலகத்து உயிர்களை எல்லாம் தனக்குள் ஒன்றிடச் செய்பவன்.

நினைக்கும்போதே உயிர் உருகச் செய்யும் ஆனந்த வடிவினன். நெஞ்சு இனிக்க, வாய் மணக்க, சொல்லச்சொல்ல இனிக்கும் நாமம் ‘முருகா'. அவனைப் பாடிக் களித்திடவே பற்பல ஞானிகள் பூமியில் அவதாரமெடுத்தனர். அவனை மெய்சிலிர்க்கப் பாடி, தன்னைப் பூரணமாக ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து, தான் அனுபவித்த ஆனந்தத் தேனை இசை வடிவாகப் பலர் இயற்றித் தந்திருந்தாலும், அதில் தன்னிகரில்லாமல் ஜொலிப்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்.முருகனின் முதல் அடி: தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும் திருப்புகழை தினசரி பாராயணம் செய்கிறார்கள் பக்தர்கள். இதில் உள்ள இசைத் தாளங்கள் எந்த ஓர் இசை நூலிலும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றவை. இதில் 1,334 இசைப் பாடல்கள் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x