Published : 03 Nov 2022 06:38 AM
Last Updated : 03 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 06: அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே…

அன்பே சிவம் என்று திருமூலர் காட்டிய அதே வழிதான். அன்புசெய், இறைவனை அடையலாம் என்று வள்ளலாரும் வழிமொழிகிறார். பரசிவ வணக்கத்தோடு தொடங்குகிறது ஆறாம் திருமுறை. தனிக் குறளும் இரு விருத்தங்களுமாக எழுதப்பட்ட மூன்று பாக்களைக் கொண்டது, ‘பரசிவ வணக்கம்’. அவற்றில் ஒரு பாடல், பரசிவத்தை அன்பு என்கிற கைப்பிடிக்குள் அடங்குகின்ற மலையே என்று துதிக்கிறது.

அன்பு என்கிற குடிலுக்குள் அகப்பட்ட அரசு, அன்பு என்கிற வலைக்குள் அகப்பட்ட பரம்பொருள், அன்பு என்கிற கைக்கிண்ணத்தில் அகப்பட்ட அமுதம், அன்பு என்னும் குடத்தில் அடங்கிய கடல்… இவ்வாறு அப்பாடல் நீள்கிறது. அன்பு எனும் அணுவுக்குள் அமைந்த பேரொளியாக இறையைச் சிறப்பித்து, அன்பே உருவாகிய சிவமே என்று போற்றி நிறைவுறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x