Published : 27 Oct 2022 06:41 AM
Last Updated : 27 Oct 2022 06:41 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 05: தனித்தனி முக்கனி பிழிந்து...

ஐந்தெழுத்தையும் ஐந்தொழிலையும் குறிப்பால் உணர்த்தும் ஆனந்தத் தாண்டவம்; நடமிடும் பொதுவின் முன்னே பொற்சபை; ஐம்பூதங்களில் ஆகாயத்தைக் குறித்து நிற்பது; ஆறு ஆதாரங்களில் இதயமாய் அமைந்தது என தில்லைக்குப் பெருமைகள் பற்பல. நடமிடும் உருவம், வெட்டவெளி அருவம், அருவுருவாய் லிங்கம் என மூன்று நிலை திருக்காட்சி.

திருவாசகத்தை வழிபடுநூலாகக் கொண்டு தனது தேடலைத் தொடங்கிய வள்ளலார், தில்லையை அடைந்தது இயல்பானதே. திருவாசகப் பதிகங்களில் சரிபாதி தில்லையில் பாடியவை. மணிவாசகரின் திருக்கோவையாரும் அம்பலத்தானைப் பாடியதே. தில்லை சிற்சபையிலேயே மணிவாசகர் இறையோடு கலந்து மறைந்தார். அங்கு, தூக்கிய திருவடியின் கீழ், நிரந்தரமாகவும் இடம்பிடித்துக்கொண்டார். அவர் வழி வந்த வள்ளலார், தாம் பாடிய பதிகங்களின் தொடக்கத்திலும் முடிப்பிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என எழுதும் சைவநெறியைப் பின்பற்றியவர். ஏறத்தாழ 12 ஆண்டுகள் சிதம்பர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர். தம் பெயரின் முன்னே சிதம்பரம் என்று அங்கே பிறவாரா யினும் ஊர்ப் பெயர் குறித்தவர். ‘எல்லாம் செயல்கூடும்…’ என்று தன் மீது ஆணையிட்டு தில்லைநாதனின் பெருமையைப் பாடியவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x