Published : 20 Oct 2022 06:40 AM
Last Updated : 20 Oct 2022 06:40 AM
இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி திகழ்கிறது. தீபாவளித் திருநாளில் தங்க நாணயம், வெள்ளியிலான பொருட்கள் வாங்கினால் குடும்பத்தில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமன்றித் தென் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு நரகாசுர வதம் தொடர்பான புராணக் கதையே முன்னிறுத்தப்படுகிறது.
நற்கதிக்கு அருளும் திருநாள்: பண்டிகைகளின் நோக்கமே இறைவனின் கருணை யைப் பரிபூரணமாகப் பெற வேண்டும், ஆரோக்கியம் வேண்டும், நற்காரியங்களில் மனத்தைக் குவிக்க வேண்டும், நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்பதுதான். இதை வலியுறுத்துவதற்கே தீய செயல்களைச் செய்தவர்களை அசுரர்களாகவும் சில நேரம், தேவர்களும் முனிவர்களும் மன்னர்களும்கூட அத்தகைய செயல்களில் ஈடுபடும்போது அந்தத் தீய குணங்களை அழிப்பதற்காக அவதாரங்கள் நிகழ்த்துவதைப் புராணக் கதை களின்வழி அறிய முடிகிறது. நரகாசுரன் என்னும் அரக்கனின் முடிவும் அவ்வாறே மகாவிஷ்ணுவால் ஏற்படுகிறது. மண்ணுலகில் முனிவர்கள், அரசர்கள் ஆகியோரைத் துன்புறுத்திய நரகாசுரன், தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT