Published : 20 Oct 2022 06:37 AM
Last Updated : 20 Oct 2022 06:37 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 04:  குளிர்தருவே... தரு நிழலே...

இளம்வயதில் முருகனைப் பாடிய வள்ளலார், காலப்போக்கில் சிவனை நோக்கி நகர்ந்தார். ஒற்றியூர் காலகட்டம் அவ்வகையில் முக்கியமானது. எளியேன் என்றும் சிறியேன் என்றும் அவர் தன்னை நொந்து இறையருளை இரந்து நின்ற காலம் அது. மணிவாசக மொழியில் ‘நாயேன்’ என்றும் ‘நாயினும் கடைப்பட்டவன்’ என்றும் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நிலையைப் பாடல்தோறும் பார்க்க முடிகிறது.

ஒற்றியூர்ப் பதிகங்கள்: 12 வயதில் தொடங்கிய அவரது மெய்யியல் தேடல் பயணத்தில், 35 வயதில் சென்னையை விட்டு நீங்கும்வரை திருவொற்றியூர் தியாகராசப் பெருமானை, வடிவுடையம்மனை, ஒற்றியூர் முருகனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது வாழ்வில் ஏறக்குறைய சரிபாதி திருவொற்றியூரைச் சுற்றி அமைந்துள்ளது. எனவே, அவரது பாடல்களில் ஒற்றியூர்ப் பதிகங்கள் மிகுந்திருப்பது இயல்பானது. இளம்வயது வள்ளலார் திருத்தணிகை முருகனை நேரில் சென்று தரிசிக்க இயலாதவராய், ஒற்றியூர் முருகனைக் கண்டு அவனில் தணிகையனைத் தரிசித்தார். கற்பூரம் என்னும் வெண்பளிதம் வாங்கவும் வாய்ப்பற்று பதிகம் பாடிய சிறுவனுக்கு, தணிகை செல்வது எப்படிச் சாத்தியப்பட்டிருக்கும்? பிள்ளை முருகனை நோக்கிய அவரது வேண்டுதல்கள் பின்னர் பெற்றோரை நோக்கியும் நீண்டது. அவர்கள் இருவரையும் தலைவன்-தலைவியாக்கி இயற்றிய அகப்பொருள் பாடல்களில் தமிழ் மரபும் பக்தி மரபும் ஊடாடிக் கலந்துநிற்கின்றன. வடிவுடை அம்மன் மீது அவர் பாடிய மாணிக்கமாலை, சக்தி உபாசகர்களுக்குச் சிறப்பான தோத்திரம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x