Published : 20 Oct 2022 06:35 AM
Last Updated : 20 Oct 2022 06:35 AM

ப்ரீமியம்
சித்திரப் பேச்சு: ஞானத்திற்கு எதற்கு வீணை?

வேதா

யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊர் கங்கை கொண்ட சோழபுரம். கங்காபுரி, கங்கை மாநகர், கங்காபுரம் எனப் பழமையான பெயர்களும் இதற்கு உண்டு. ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் பொ.ஆ.(கி.பி.) 1019இல் கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக ‘கங்கை கொண்ட சோழன்’ என்கிற பட்டத்தைப் பெற்ற தமிழ் மன்னன். தன் வெற்றியின் நினைவாக பொ.ஆ. (கி.பி.)1023இல் ஒரு புதிய நகரை நிர்மாணித்து, அதில் பெரிய ஏரியை வெட்டி கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரை அதில் நிரப்பி, அதற்கு ‘சோழகங்கம் ஏரி’ எனப் பெயரிட்ட ஊர் இது. ராஜேந்திர சோழனால் ‘கங்கை கொண்ட சோழீஸ்வரர்’ என்கிற பெரிய சிவாலயம் நிர்மாணிக்கப்பட்ட ஊர் ‘கங்கை கொண்ட சோழபுரம்’. இவ்வூர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகில் உள்ளது. இது தஞ்சை பெரிய கோயிலைப் போலவே மிகப் பெரிய கோயில் ஆகும். தன் தந்தையின் பெயர்சொல்லும் தஞ்சை பெரிய கோயிலைப் போலவே இக்கோயிலை ராஜேந்திர சோழன் நிர்மாணித்தார். இக்கோயிலின் மகா மண்டபத்தின் வடக்கு வாசல் படிக்கட்டில், சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் எதிரில்தான் வீணை இல்லாத இந்த ஞான சரஸ்வதி உள்ளார். இக்கோயிலில் உள்ள சிலைகளிலேயே மிகவும் அழகான, நுட்பமான சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம் இந்த ஞான சரஸ்வதி சிற்பம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x