Published : 13 Oct 2022 06:34 AM
Last Updated : 13 Oct 2022 06:34 AM
சூபி சித்தர் தக்கலை பீர் முஹம்மது அப்பா இந்த உலகுக்குத் தந்த ஞானப் பாடல்கள் யாவும் மனித குலத்துக்கும் தமிழுக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். சாதி சமயம் கடந்த நிலையில் அனைவராலும் உரிமையோடு ‘அப்பா’ என்று அழைக்கப்படுகின்ற தனித்துவம் பெற்ற ஞானி தக்கலை பீர் முஹம்மது.
பீரப்பா தன் தந்தையுடன் சேர்ந்து தக்கலையில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இருந்தபோதிலும் ஞான மார்க்கத்திலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். ஆழ்ந்த சிந்தனையுடைய பீரப்பா தனிமையை அதிகமாக விரும்பினார். 18,000 தமிழ் ஞானப் பாடல்களைத் தந்தவர் அவர். கேரளத்தின் வனப் பகுதியில் பீரப்பா தவம்புரிந்த குன்றினை ‘பீர்மேடு’ என்றே அழைக்கின்றனர். ‘பீர்மேடு’ கேரளத்தில் ஒரு தாலுகாவாகவே உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் முதல் ஏழை எளிய சாமானியர்கள் வரை அனைவரிடமும் பீரப்பா நல்லிணக்கத்தோடு நடந்துகொண்டார். ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பாராமல் தன்னை நாடி வருபவர்களின் நோய்களுக்கும் துயரங்களுக்கும் இறைவன் அருளால் பீரப்பா மருந்தாகினார்; தீர்வாகினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT