Published : 13 Oct 2022 06:36 AM
Last Updated : 13 Oct 2022 06:36 AM

ப்ரீமியம்
விவிலியம்: அள்ளித் தரும் நீதிமொழிகள்!

புனித விவிலியத்தில் உள்ள நீதிமொழிகள் புத்தகம், மத வேறுபாடுகளைக் கடந்து அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தைப் பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் எளிய வழிகாட்டுதல்களை அள்ளித் தருகிறது. இந்த நூலை எழுதியவர் பொ.ஆ.மு. (கி.மு.) 1037 முதல் இஸ்ரவேல் தேசத்தின் அரசனாக முடிசூட்டப்பட்ட சாலமோன். அவர் தனது முதுமையில் எழுதிய மூவாயிரத்துக்கும் அதிகமான நீதிமொழிகள் ஒரே புத்தகமாக அவருக்குப் பின்னர் வந்த எசேக்கியரின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

நீதிமொழிகள் புத்தகத்தில் இல்லறம், பிள்ளை வளர்ப்பு, நேர்மையாக வாழ்தல், வணிகம், தவிர்க்க வேண்டிய பண்புகள், நேர் வழியில் பொருளீட்டுதல் என வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் சாலமோன் எழுதியிருக்கிறார். இவை அனைத்தையுமே, கடவுளின் பிள்ளைகளாக, அவருடைய நிழலை விட்டு விலகாமல் எளிதில் கடைப்பிடிக்கும் வழிகாட்டுதல்களாக எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தை அனைவருக்குமான ஆன்மிகப் புத்தகமாக மாற்றிவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x