Published : 06 Oct 2022 06:38 AM
Last Updated : 06 Oct 2022 06:38 AM

ப்ரீமியம்
அருட்பிரகாசம் 02 | வள்ளலார் 200: பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களும்

சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’யைக் கேட்பது ஆழ்ந்த பேரனுபவம். யூடியூப் தளத்திலும் கேட்கக் கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் செலவழித்தால், நல்ல இசையனுபவமும்கூட. டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பு, வள்ளலாரின் பாடல்களில் இழையோடும் தாளலயத்தைக் கவனமாகக் கையாண்டிருக்கிறது என்பதோடு அப்பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு வார்த்தையும் கேட்போரின் மனதைத் தைக்கும்வகையிலும் அமைந்துள்ளது.

எளிமையில் வளமை: கந்தகோட்டத்து முருகன் மீது கந்தர் சரணப்பத்தும் பாடியிருக்கிறார் வள்ளலார். கந்தகோட்டத்து முருகனைப் போலவே திருத்தணிகை முருகன் மீதும் அவர் பாடியிருக்கிறார். அவற்றில் பிரார்த்தனை மாலை தனிச்சிறப்பானது. நேர் பதினாறு, நிரை பதினேழு என்று எழுத்தெண்ணி பாடப்படும் கட்டளைக் கலித்துறை பாவகையைச் சேர்ந்தது. தமிழ்ப் புலமையின் அடையாளம் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் கட்டளை கலித்துறையை எழுத்தறியாதவர்களும் புரிந்துகொள்ளும்வண்ணம் எளிய தமிழில் கையாண்டிருக்கிறார் என்பது வள்ளலாரின் இலக்கியச் சிறப்பு. மரபுக் கவிதையில் எளிமையைப் புகுத்திய முன்னோடிகளில் வள்ளலார் முதன்மையானவர். பிரார்த்தனை மாலையின் தொடக்கச் செய்யுளான ‘சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்…’ எனத் தொடங்கும் கலித்துறை மிகவும் பிரபலமான ஒன்று. போற்றித் துதிக்கும் ஒரு பூமாலைதான். ஆனால், அந்தக் கலித்துறையின் ஆனந்த அனுபவத்தை அப்படியே நம்முள் ஏற்றிக்கொள்ள வேண்டுமெனில், வள்ளலாரின் இசைத்தூதர் மழையூர் சதாசிவம் குரலில் கேட்டாக வேண்டும். ‘திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களும்’ என்று அவர் பாடும்போது கடம்பும் கமலமும் மனதில் வாசம் வீசும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x