Last Updated : 17 Jun, 2022 05:44 PM

 

Published : 17 Jun 2022 05:44 PM
Last Updated : 17 Jun 2022 05:44 PM

ப்ரீமியம்
பக்திக்கு வசுமதியின் இசைக் கொடை

கர்னாடக இசைப் பாடகராக மட்டும் தன்னுடைய எல்லையைக் குறுக்கிக்கொள்ளாமல், எழுத்து, ஆய்வு எனப் பல துறைகளில் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டவர் மும்பையைச் சேர்ந்த டாக்டர் வசுமதி பத்ரிநாத். இவருடைய தாய் பத்மா சேஷாத்ரியே இவரின் முதல் குரு. பின்னாளில் டி.ஆர். பாலாமணியிடமும் இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இசை சார்ந்த தேடல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் இசைத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளை அவர் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்ற வசுமதி, பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இந்திய இசை வடிவங்கள் குறித்து ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலகின் பல பகுதிகளிலிருந்து வெளிவரும் இதழ்களில் எழுதியிருப்பவர் இவர். ‘ஏசியன் ஏஜ் நியூஸ்’ நாளிதழில் இவர் எழுதிய இசைப் பத்திகள் புகழ் பெற்றவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x