Last Updated : 02 Jun, 2022 07:10 AM

 

Published : 02 Jun 2022 07:10 AM
Last Updated : 02 Jun 2022 07:10 AM

ப்ரீமியம்
அன்பைக் கொண்டு ஒரு சோதனை

அன்பும் அறிவும் இல்லாமல் மனிதர்களுக்கு வாழ்வே கிடையாது. இவை இரண்டும் மனித ஆன்மாவிலிருந்து நேரடியாகச் சுரக்கக்கூடியவை. இறைவன் நமக்கு அளிக்கும் சோதனைகளில் மிகக் கடுமையானது அன்பின் அடிப்படையில் வருவதே. இந்தச் சோதனை நம் உடலிலிருந்து உயிரைப் பிடுங்கி எடுப்பதற்குச் சமமானது. வறுமை, நோய், கஷ்டம் போன்ற அனைத்து சோதனைகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாகக் கடந்து செல்லும் மனிதன், அன்பின் அடிப்படையிலான சோதனையில்தான் நிலை தடுமாறிப் போகிறான்.

ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் அனைவருமே இறுதியாக அன்பைக்கொண்டே சோதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனையின் வடிவம் மட்டும் ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்குப் பெற்றோரைக் கொண்டு சோதனை. சிலருக்குப் பிள்ளைகளைக் கொண்டு சோதனை. சிலருக்கு மனைவியைக் கொண்டு சோதனை, இன்னும் சிலருக்குக் காதலன் அல்லது காதலி என்கிற பெயரில் சோதனை. அப்போது ஏற்படும் துயருக்கும் கண்களில் வழியும் கண்ணீருக்கும் அளவே கிடையாது. மனம் கவலையில் மூழ்கும். உடல் பலவீனம் அடையும். என்னை மட்டும் இறைவன் இப்படிச் சோதிக்கிறான் என ஆன்மா கதறியழும். தன் நேசர்களைப் புடம் போட்ட தங்கமாக மாற்ற இறைவன் அளிக்கும் மருந்தே இந்தச் சோதனை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x