Published : 12 May 2022 07:55 AM
Last Updated : 12 May 2022 07:55 AM

ப்ரீமியம்
யார் அந்தப் பாம்பாட்டிச் சித்தர்?

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், `பாம்பாட்டிச் சித்தர் யார்?' என்ற அவை முன்னவரின் குறுக்குக் கேள்வியும், அதற்கு அறநிலையத் துறை அமைச்சர் அளித்த பதிலும் கவனம் பெற்ற செய்தியானது. சர்ப்பமாக மாறி முருகனை வழிபட்டவர், தென்காசியில் ஜீவசமாதி அடைந்தவர் என்று பாம்பாட்டிச் சித்தர் குறித்த தகவல்களை அறநிலையத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.

‘தெளிந்து தெளிந்து தெளிந்து...’ என்ற முதலடியோடு தொடங்குகிறது பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள். தெளிந்து அதனினும் தெளிந்து எனத் தொடரும் இந்த வரி உண்மையறிவே உய்விக்கும் என்ற உன்னதப் பொருளை உணர்த்துவது. அவரது 129 பாடல்கள் கிடைத்துள்ளன. 111 கண்ணிகள், எஞ்சியவை எண்சீர் விருத்தங்கள். தமிழ்நாட்டுச் சித்தர்களின் புரட்சிக் குரலை பாம்பாட்டிச் சித்தர் பாடல்களில் தெளிவாகக் கேட்க முடிகிறது. பொய்களைச் சொல்லும் குருமார்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், உண்மையான விடுதலைக்கு வழிகாட்டும் ஞானிகளை நம்புங்கள் என்பது அவரது உபதேசங்களில் முக்கியமான ஒன்று. உலக இன்பங்கள் நிலையற்றவை, அவற்றில் உள்ளத்தைச் செலுத்துவோர் மூடர்கள் என்று சாடியவர் அவர்; உடல் நிலையற்றது என்பதை எண்ணத்தில் இருத்தி எல்லோரும் பயனுற வாழ்ந்திட வலியுறுத்தியவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x