Published : 28 Apr 2022 08:11 AM
Last Updated : 28 Apr 2022 08:11 AM

ப்ரீமியம்
அரங்கனின் ‘விருப்பன் திருநாள்’ வைபவங்கள்

வெ. ராஜகோபால்

“ரங்கா ரங்கா” என்று அழைக்கப்படும் திருவரங்க ரங்கநாதர் கோவில் பிரதான கோபுரத்தை ஒட்டியுள்ள உத்தர வீதியும் அதைச் சுற்றி அமைந்துள்ள, சித்திர வீதியும் நீண்ட சாலைகளைக் கொண்டவை. அவ்வாலயத்தின் நான்கு புறங்களிலும் அதே சாலைகள் வளைந்து வளைந்து வருவதால் ஒவ்வொரு திசையின் பெயரையும் சேர்த்துத் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வீதிகளிலிருக்கும் ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறமும் நன்றாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டுச் சாலைகளின் மத்தியில் கோலங்கள் போடப்பட்டு, பெருமாளை வரவேற்கக் காத்திருந்தன. பெருமாள் அவ் வழியே எழுந்தருளப் போகிறார் என்பதாலும் அவரைப் பின்பற்றி வேதமும், திவ்யப் பிரபந்தமும் இசைத்துக்கொண்டு வரும் பண்டி தர்களையும் வரவேற்று ஆசிபெற வேண்டும் என்பதும் பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x