Last Updated : 28 Apr, 2022 08:17 AM

 

Published : 28 Apr 2022 08:17 AM
Last Updated : 28 Apr 2022 08:17 AM

ப்ரீமியம்
தேர்வும் பரிசும்

கதிரவனின் எழுதலுக்கும் விழுதலுக்கும் இடைப்பட்ட ஓர் அன்றாடமானது இடைவிடாமல் நம்மிடம் வரும்போது, அதுவே ஒரு தேய்நாளாகிவிடுகிறது. சலிப்பும் சோர்வும் மனிதனை அலைக்கழிக்கின்றன. நம்மிடம் அன்றாடம் இருந்து வரும் உடல் நலம், மன நலம், பொருள் நலம் உள்ளிட்ட வாழ்க்கைப் பேறுகளை ஏதாவது கெடு நிகழ்வோ விபத்தோ சிதைத்துவிடும் வரைக்கும் சராசரி நாளின் அருமை பெருமையை நாம் உணர்வதில்லை.

தேய்நாட்களின் சலிப்பைப் போக்க, பெரும் இடர்களற்ற சராசரியான வாழ்க்கை கிட்டுவதென்பதே ஓர் அருட்கொடைதான் என்பதை அதிரடிகளின் வழியாக அல்லாமல் இயல்பாக உணர்ந்திட நோன்பு மாதமும் அதன் நிறைவாக ஈகைத் திருநாளும் நம்மிடம் வந்து சொல்கின்றன. ஆனால், ஈகைத் திருநாளை இதற்குள் மட்டும் குறுக்கிட இயலாத அளவிற்கு அது கொள்ளும் விரிவு பெரியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மானிடத்திற்கு மிக அத்தியாவசியமான உண்ணுதல், பருகுதல், உடலின்பம் ஆகியவை நோன்பு காலத்தில், ஒரு நாளின் பாதியில் துறக்கப்படுகின்றன. அதுவே அந்த நாளின் பிற்பகுதியான இரவில் அனுமதிக்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x