Last Updated : 26 Apr, 2022 04:01 PM

 

Published : 26 Apr 2022 04:01 PM
Last Updated : 26 Apr 2022 04:01 PM

ப்ரீமியம்
யேசுதாஸின் `நீலவர்ணன்'!

பக்தி இசை, செவ்வியல் இசை, திரை இசை எனப் பல பரிமாணங்களிலும் யேசுதாஸின் இசைப் பங்களிப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
இசைக் கலைஞரும் நாடக நடிகருமான அகஸ்டின் ஜோசப்தான், யேசுதாஸின் பாடும் திறமையை உணர்ந்து அவருக்கு ஆரம்ப இசைப் பயிற்சிகளை வழங்கிய முதல் குரு. அதன்பின், யேசுதாஸை முறையாக இசை கற்றுக் கொள்வதற்காக அவரின் தந்தை திருப்புனித்துராவிலிருக்கும் ராதாலஷ்மி விலாசம் இசைப் பள்ளியில் சேர்த்தார். அங்குதான் யேசுதாஸுக்கு இசையின் பால பாடங்கள் முறையாகத் தொடங்கின.

மதநல்லிணக்கப் பாடல்

யேசுதாஸ் பாடிய முதல் பாடலே மதநல்லிணக்கப் பாடலாக அமைந்தது. மலையாள திரைப்படம் `கால்ப்பாடுகள்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் எம்.பி.ஸ்ரீனிவாஸின் இசையமைப்பில் ஸ்ரீ நாராயண குருவின் `ஜாதி பேதம் மததுவேசம்’ என்று தொடங்கும் நான்குவரி ஸ்லோகமே திரையில் ஒலித்த யேசுதாஸின் முதல் குரல் பிரவேசம். அதே படத்தில் ஒரு டூயட் பாடலையும் யேசுதாஸ் பாடுவதற்கு வாய்ப்பளித்தார் எம்.பி.ஸ்ரீனிவாஸ். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் வந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x