Published : 01 Apr 2020 12:55 PM
Last Updated : 01 Apr 2020 12:55 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் (ஏப்ரல் 2 முதல் 8ம் தேதி வரை) 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
தனாதிபதி சுக்கிரனின் ஆட்சி பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும்.
சொத்துக்கள் மீது இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். ராசிக்கு 12ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.
நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
பெண்களுக்கு : சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு : மனதில் தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு ; கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 9
பரிகாரம்: தினமும் அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலைத் தவிர்க்கும்.
*********************************************************************************************************

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
இந்த வாரம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.
ராசிநாதன் சுக்கிரன் ராசியில் இருக்கிறார். தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும்.


ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுர்யமான செயல்களால் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.
பெண்களுக்கு ; பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு ; வேலைகள் உடனே நடக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு ; கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: தினமும் சிவபூஜை செய்து வழிபட பணத் தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.
*********************************************************************************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
இந்த வாரம் புதன் தொழில்ஸ்தானத்தில் இருக்கிறார். நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும்.
எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாகக் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும் நட்பும் தூண்டுவார்கள். வீண் அலைச்சல் செலவு அகலும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளைத் தள்ளிப் போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு ; சுப விரயச் செலவுகள் ஏற்படும். கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு ; புத்திக்கூர்மை வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
மாணவர்களுக்கு ; உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: தினமும் குலதெய்வத்தை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
*******************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x