Published : 20 Feb 2020 12:43 PM
Last Updated : 20 Feb 2020 12:43 PM

வார ராசிபலன்கள் 20-02-2020 முதல் 26-02-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுக்கும். ஏழாமிடத்தைக் குரு பார்ப்பதால் செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: வாராகிதேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிலும் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாகச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவார்கள். பெண்களுக்கு, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு, நீண்ட நாள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு, எதையும் அவசரமாகச் செய்யாமல் யோசித்துச் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: வேல் விருத்தம் பாடி முருகனை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரக கூட்டணி பல விதத்திலும் நற்பலன்களைக் கொடுக்கும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையைச் செய்து முடிக்க திட்டமிடல் அவசியம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, மனத் தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் தங்கள் காரியங்களை முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தம் சம்பந்தமான விஷயங்களில் இருந்த தொய்வு நிலை மாறும். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: மஹாகணபதியை வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிக்குப் புதன் பகவான் வக்ர நிலைமையில் மாற்றம் பெறுகிறார். இருப்பினும் அவரது பாதசாரத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனத்தில் சந்தோஷம் உண்டாகும். இரண்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்களுக்கு, மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினருக்கு, புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, சொல்வாக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பது மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: சனி பகவானைத் தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் புதன் விரய ஸ்தானத்துக்கு மாறுகிறார். கவுரவம் அதிகரிக்கும். ராசியில் இருக்கும் சூரியனால் அரசு அரசாங்க அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். தனவாக்கு சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, பிடித்தமான இடத்துக்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். பெண்களுக்கு, அடுத்தவர் பேசுவதைக் காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, மனத்தில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு, பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வழிபட எல்லாத் துன்பங்களும் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சுக்கிரன் உச்ச நிலையில் இருக்கிறார். ராசியைச் செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார். அறிவுத் திறமை வெளிப்படும். ராசிக்குச் செவ்வாய் பார்வை இருப்பதால் அடுத்தவர்களின் தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சனி சஞ்சாரத்தால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு, எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகளும் அதன் மூலம் பொருள் வரவும் இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x