Published : 26 Dec 2019 01:47 PM
Last Updated : 26 Dec 2019 01:47 PM

வார ராசி பலன் 26-12-2019 முதல் 01-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ஆனால் மற்ற கிரகங்களுடைய இருப்பின் மூலம் நன்மையே நடக்கும். பணதேவை பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு மனக்கவலை அகலும். சுபநிகழ்வுகளில் இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், பச்சை

எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: கந்தகுரு கவசத்தை படிக்க துன்பங்கள் விலகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபத்தை குறைத்து கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். ஆனாலும் ராசிநாதன் சுக்கிரனின் பாக்கியஸ்தான சஞ்சாரத்தால் அனைத்தும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வட கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 2, 4, 5

பரிகாரம்: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் நன்மைகள் அதிகமாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்குவன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் சுபச்செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு யாரிடமும் நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென் கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 3, 5, 8

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய மனதில் நினைத்தது நிறைவேறும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் பஞ்சம பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆட்சி பெறுகிறார். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் வரும்.

பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். வாகன யோகம் உண்டாகும். மேலிடத்தில் உறவு பலப்படும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;

திசைகள்: தெற்கு, வட மேற்கு

நிறங்கள்: வெண்மை, இளம்பச்சை

எண்கள்: 4, 8, 9

பரிகாரம்: நாக தேவதைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் மற்றும் குரு சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குழப்பங்கள் நீங்கும். மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வட கிழக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 7, 8, 9

பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் நந்தீஸ்வர பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள். தடைகள் அகலும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: வட மேற்கு, கிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 5, 8, 9

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x