பிரசாதம்: ஒரு சொல்

பிரசாதம்: ஒரு சொல்
Updated on
1 min read

புத்த சமயத்தை ஒரே ஒரு சொல்லில் வருணிக்க வேண்டுமென்றால் ‘பற்றற்ற’ நிலை (Non attachment) என்பதாகத்தான் இருக்கும். புத்தரின் சுமார் எண்பத்து நாலாயிரம் பாடங்களும் இதனையே பேசுகின்றன. பற்றற்ற நிலையும் பிரிவு நிலை (Detachment), அல்லது தொடர்பற்ற நிலையும் முற்றிலும் வேறுபட்டவை.

- ஜென்

பாற்கடலின் பரிசு

பாரிஜாதம் இந்தியாவின் பவள மரம் என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஐந்து மரங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. அது இந்திரனின் சொர்க்கத்தில் வளர்ந் தது. வாசம் உலகங்களை நிறைத்தது.

- விஷ்ணு புராணம்

அனிலா

உடல் சாம்பலாகும்போது, மரணமூச்சு சென்றடையும் ’அழிவற்ற காற்று’. மரணத்தின் போது இவ்வுலகில் வாழும் மனிதனின் பல்வேறு பாகங்கள் பேரண்டத்தின் பாகங்களைச் சென்றடைகின்றன என்ற கருத்து சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

************

எதில் சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் வரை சந்தோஷமாக இருக்கவே முடியாது. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டேயிருக்கும் வரை நீங்கள் வாழவே போவதில்லை.

- ஆல்பெர் காம்யூ


சுருக்கமான வசந்தகாலத்து இரவில்
மிதந்த கனவுகளின் பாலம்
சீக்கிரமே உடைந்துபோகிறது
இப்போது
மலையின் உச்சியிலிருந்து
ஒரு மேகம்
திறந்த வானத்துக்குள் சென்று அடைகிறது.

- டோஜன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in