செவ்வாய் தோஷம் போக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர்

செவ்வாய் தோஷம் போக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர்
Updated on
2 min read

கும்பகோணத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சிறுகுடி சூட்சும புரீஸ்வரர் கோயில், செவ்வாய் தோஷம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி மிகவும் விசேஷமானதாக போற்றப்படுகிறது.

தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in