பிறவித் துன்பம் போக்கும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்

பிறவித் துன்பம் போக்கும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 28-வது தேவாரத் தலமாகும். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மதேவனின் எட்டு மானச புத்திரர்கள் சாரூப்ய பதவிக்காக தவம் இருந்தனர். முடிவில் சாரூப என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனர்.

எனவே யுகத்துக்கு இருவர் என்று கழுகுகளாக இங்குவரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம். (14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள்.) பூஷா , விருத்தா என்ற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டித் தவம் செய்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in