

மூலகாப்பியமான வான்மீகத்தைத் தொடர்ந்து, பல்வேறு பிராந்திய மொழிகளில், காப்பியங்களாகவும் கதைப் பாடல்களாகவும் இராமகாதை இயற்றப் பெற்றது. அனைத்து இராமாயணங்களும் இராமகாதையின் அடிப்படை தார்மிகத்தை அப்படியே நிலைநிறுத்துகின்றன.
ஏகநாதர் என்னும் அருளாளரால், மராட்டி மொழியில் இயற்றப்பெற்ற காப்பியம், பாவார்த்த ராமாயணம் என்பதாகும். சமூக-பொருளாதார-அரசியல் சிக்கல்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், சாதாரண நிலையிலிருந்த மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும், இராமன் கதை மட்டுமே வழங்க முடியும் என்று நம்பிய சான்றோரில் ஏகநாதரும் ஒருவர்.