

குடந்தை - காரைக்கால் சாலையில் 16 கிமீ தொலைவில் உள்ள திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், ஆயுள் பலத்தை அதிகரிக்கும் கோயிலாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் எம பரிகாரம், ராகு கேது தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்தியை மெச்சிய இறைவன் அவர்கள் முன்பு தோன்றி, 1,000 ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க, மிருகண்டு முனிவர் தம்பதி தங்களுக்கு 16 வயது மகனே வேண்டும் என்றனர். இறைவன் அருளால் அவர்களின் மகன் மார்க் கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார்.