

மக்களின் உயிராதாரம் என்பதால், இராமாயணக் கதை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு; அனைத்து மொழிகளிலும் உண்டு; அனைத்து வடிவங்களிலும் அனைத்து மரபுகளிலும் உண்டு.
கதைப்போக்கில் சிறு சிறு மாற்றங்களும், வேறுபாடுகளும் இருந்தாலும், இராமாயணம் என்னும் உணர்வும், இராமகாதை என்னும் நம்பிக்கையும், இராமபக்தி என்னும் ஊக்கமும், இந்தியர்கள் யாவருக்கும் ஒன்றே! சிம்மாசனத்தில் அமர்ந்து தன்னுடைய கைவிரல்களை நீட்டியும் மடக்கியும் விளையாடிக் கொண்டிருந்தான் இராமன்.