

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருஆப்பாடி என்னும் வீராக்கண் திருவாய்பாடியில் மிகப் பழமையான கோயிலில் பெரியநாயகி அம்பாளுடன் பாலுகந்தீஸ்வரர் (பாலுகந்தநாதர்) அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இத்தலம் நாற்பதாவது தலமாகும்.
‘அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாப ரத்தைக் கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு சண்டியார்க்கருள் கள் செய்த தலைவர் ஆப்படியாரே’ என்று திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது.